விருப்ப ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி - நிதிஷ்குமார் கட்சியில் இணைந்தார்
பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விருப்ப ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி குப்தேஷ்வர் பாண்டே ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்துள்ளார்.
பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விருப்ப ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி குப்தேஷ்வர் பாண்டே ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்துள்ளார். அம்மாநில முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமாரை சந்தித்த அவர், கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். பீகார் காவல்துறையின் தலைமைஇயக்குநராக இருந்த குப்தேஷ்வர், அரசியலில் களமிறங்குவதற்காக கடந்த வாரம் விருப்ப ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story