"கை தட்டுவதாலும், விளக்கு ஏற்றுவதாலும் கொரோனா ஒழிந்து விடுமா?" - திமுக எம்.பி. தயாநிதி மாறன்

மக்களவையில் கொரோனா சூழல் குறித்த விவாதத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் பேசியபோது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு தோல்வியுற்றதாக குற்றம்சாட்டினார்.
x
மக்களவையில் கொரோனா சூழல் குறித்த விவாதத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் பேசியபோது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு தோல்வியுற்றதாக குற்றம்சாட்டினார். எல்லாவற்றையும் இரவு 8 மணிக்கு அவசர கதியில் அறிவிப்பதற்கான அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பிய தயாநிதிமாறன், பிரதமரின் அமைச்சரவையில் சரியான ஆலோசனை வழங்கும் நபர் இல்லை என்று குற்றம்சாட்டினார். கடன் விவகாரத்தில், வங்கிகள் நிதியமைச்சரின் எந்த அறிவிப்பையும் மதிக்கவில்லை என்றும் தயாநிதிமாறன் குறை கூறினார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு போதிய நிதி வழங்கவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்