நாட்டில் இணையதள குற்றங்கள் 500% அதிகரிப்பு - தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தகவல்

நாட்டில் இணையதள குற்றங்கள் 500 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
நாட்டில் இணையதள குற்றங்கள் 500% அதிகரிப்பு - தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தகவல்
x
2 நாட்களாக நடைபெற்ற தேசிய இணையதள மாநாட்டில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றார். இதில் பேசிய அஜித் ​தோவல் பணத்தை கையாளும் முறை வெகுவாக குறைக்கப்பட்டு உள்ள நிலையில் இணையதள பணபரிவர்த்தனையை அதிகம் சார்ந்து உள்ளதாக தெரிவித்தார். இதனால் இணையதளம் மூலம் தகவல் பரிமாற்றமும் அதிகரித்துள்ளது என்றும் இதுதவிர சமூக வலைதளங்கள் மூலமாக கருத்து பரிமாற்றமும் அதிகரித்து உள்ளதையும் அஜித் தோவல் சுட்டிக்காட்டி உள்ளார்.  இணைய தளங்களை கண்காணிப்பதில் நாம் சிறப்பாக செய​ப்பட்டு வரும் நிலையில் சில விரும்பத்தகாத காரணிகளும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இணைய தள குற்றங்கள் 500 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளதாக தெரிவித்த அஜித் தோவல் இதற்கு காரணம் இணையதள நடவடிக்கைகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததும் முறையற்ற பயன்பாடுகளும்  தான் என தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்