"புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்தது குறித்த விவரங்கள்: மத்திய அரசிடம் ஏதும் இல்லை" - மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்க்வார்

பொது முடக்க காலத்தில் வெளியூர்களில் இருந்து தங்களின் சொந்த மாநிலத்திற்கு திரும்பிய புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்தது குறித்த விவரங்கள் ஏதும் அரசிடம் இல்லை என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் மக்களவையில் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்தது குறித்த விவரங்கள்: மத்திய அரசிடம் ஏதும் இல்லை - மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்க்வார்
x
பொது முடக்க காலத்தில் வெளியூர்களில் இருந்து தங்களின் சொந்த மாநிலத்திற்கு திரும்பிய புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்தது குறித்த விவரங்கள் ஏதும் அரசிடம் இல்லை என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்க்வார்  மக்களவையில் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார். மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். மொத்தம் இந்தியாவில் ஒரு கோடியே, 4 லட்சத்து, 66 ஆயிரத்து152 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதில் தமிழகத்தில் மட்டும் 72 ஆயிரத்து 145 திரும்பி உள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்