"கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி" - சுதந்திர தின உரையில் ராம்நாத் கோவிந்த் பேச்சு

கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதிலும், உயிரைப் பாதுகாப்பதிலும் நாம் வெற்றி பெற்றுள்ளதாக, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி - சுதந்திர தின உரையில் ராம்நாத் கோவிந்த் பேச்சு
x




74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். (gfx in 1 ) அவர் தமது உரையில், இந்தியா மற்றும் வெளிநாட்டிலும் வாழும் இந்திய மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வா​ழ்த்துக்களை கூறினார். (gfx in 2 ) பின்னர், நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என தெரிவித்தார். (gfx in 3 ) புதிய கல்வி கொள்கை சிறப்பானது என்றும்,  கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் நாம் அனைவரும் வெற்றி பெற்றுள்ளதாகவும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டார். (gfx in 4 ) கொரோனா பரவல் நேரத்தில் பிரதமரின் கரீப் கல்யாண் திட்டம் ஏழைகளுக்கு உதவியாக இருந்ததாகவும், (gfx in 5 ) ஏழைகளுக்கு அத்தியவசிய சேவைகள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், சுதந்திர தின விழா உரையில் குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்