கஸ்தூரி ரங்கன் குழுவிற்கு பிரதமர் மோடி பாராட்டு

புதிய கல்விக் கொள்கை திட்டத்தை வடிவமைத்த இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவிற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
கஸ்தூரி ரங்கன் குழுவிற்கு பிரதமர் மோடி பாராட்டு
x
புதிய கல்விக் கொள்கை திட்டத்தை வடிவமைத்த இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவிற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். 1992-ம் ஆண்டு திருத்தி அமைக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கையை மாற்றியமைக்க 2017-ம் ஆண்டில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான 9 பேர் குழுவை, மத்திய அரசு அமைத்தது.
இந்தக் குழுவானது, 484 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடம், சமர்ப்பித்தது. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையின் கீழ், உயர் கல்வியில் மாற்றங்களுக்கான சீர்திருத்தங்கள் பற்றிய மாநாட்டில் காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது புதிய கல்விக் கொள்கையின் சிறப்புகள் பற்றி எடுத்துரைத்த அவர், இதனை வடிவமைத்த கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவிற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்