கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா - தொடர்பில் இருந்தவர்கள், தனிமைபடுத்திக் கொள்ள அறிவுறுத்தல்

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையாவிற்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா - தொடர்பில் இருந்தவர்கள், தனிமைபடுத்திக் கொள்ள அறிவுறுத்தல்
x
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, பெங்களூரூவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .இந்நிலையில், முன்னாள் முதலமைச்சரான சித்தராமையாவிற்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சித்தராமையா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், மருத்துவ பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தம்முடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அறிகுறி தென்பாட்டால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் சித்தராமையா குறிப்பிட்டுள்ளார். மருத்துவர்களின் அறிவுரைப்படி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சித்தராமையா டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 

---------

Next Story

மேலும் செய்திகள்