ராமர் கோயில் கட்டுமான பூமி பூஜை - பூமி பூஜைக்கு175 பிரமுகர்களுக்கு அழைப்பு

ராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு 175 பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை கூறியுள்ளது.
ராமர் கோயில் கட்டுமான பூமி பூஜை - பூமி பூஜைக்கு175 பிரமுகர்களுக்கு அழைப்பு
x
அயோத்தியில் 5ஆம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடக்க உள்ளது. அதில், பங்கேற்கும் பிரதமர் மோடி, கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார். இதனிடையே, கொரோனா பரவல் அச்சுறுத்தல் இருப்பதால், 175 பிரமுகர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், 90 வயதை கடந்த பிரமுகர்கள், அயோத்தியை அடைவது சாத்தியம் இல்லை என கூறியுள்ள ராம ஜென்ம பூமி அறக்கட்டளை, சதுர்மாக்கள், முனிவர்கள், சங்கராச்சாரியார், துறவிகள் ராமர் கோயில் கட்டுமானத்தில் பங்கேற்கமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2 ஆயிரம் ஆலயங்களின் புனித மண், 100 நதிகளின் புனித நீரும் பூமி பூஜைக்காக அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்