கொரோனாவால் உயிரிழந்த உ.பி. அமைச்சர் - உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல்
உத்தரப்பிரதேச தொழில்நுட்ப கல்வி அமைச்சர், கமலா ராணி வருண், கொரோனா தொற்றால் இன்று காலை உயிரிழந்தார்.
உத்தரப்பிரதேச தொழில்நுட்ப கல்வி அமைச்சர், கமலா ராணி வருண், கொரோனா தொற்றால் இன்று காலை உயிரிழந்தார். கடந்த மாதம் 18ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு, லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், செயற்கை சுவாசம் மற்றும் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Next Story