லக்னோவில் வரும் 5 ஆம் தேதி ராமர் கோவில் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற உள்ளது - அயோத்தியாவில் பாதுகாப்பு அதிகரிப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் வரும் 5 ஆம் தேதி ராமர் கோவில் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற உள்ளது.
லக்னோவில் வரும் 5 ஆம் தேதி ராமர் கோவில் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற உள்ளது - அயோத்தியாவில் பாதுகாப்பு அதிகரிப்பு
x
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள நிலையில், அங்கு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கையை  தொடர்ந்து, அயோத்தியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மாநிலத்தில் உள்ள பிற முக்கிய கோவில்களுக்கும் பாதுகாப்பை அதிகரிக்க உத்தர பிரதேச மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அயோத்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த, 9 மூத்த காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அயோத்தியில் பூமி பூஜை நடைபெறும் நாள் அன்று, அரசியல் சாசனம் 370 - வது பிரிவு நீக்கப்பட்ட முதல் ஆண்டு தினம் வருவதாலும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் வருவதையும் ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை என உ.பி. அரசு தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்