ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சி - காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி உள்ளிட்டோர் கைது

ராஜஸ்தான் மாநில அரசியல் விவகாரம் சம்பந்தமாக நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் காங்கிரஸ் தலைமை அறிவித்திருந்தது.
ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சி - காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி உள்ளிட்டோர் கைது
x
ராஜஸ்தான் மாநில அரசியல் விவகாரம் சம்பந்தமாக நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் காங்கிரஸ் தலைமை அறிவித்திருந்தது. அதன் படி, தலைநகர் டெல்லியில் துணைநிலை ஆளுநர் அணில் பைஜல் இல்லத்தை முற்றுகையிட, அந்த மாநில காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் பேரணியாக சென்றனர். இதையடுத்து அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் உடனடியாக கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்கள் மத்திய அரசுக்கு எதிராக குரல்களை எழுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்