இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது : "உண்மையை மறைப்பது தேச துரோகம்" - ராகுல்காந்தி புகார்

இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது என்றும் இந்த உண்மையை பேசுவதே தேசபக்தி என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது : உண்மையை மறைப்பது தேச துரோகம் - ராகுல்காந்தி புகார்
x
இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது என்றும் இந்த உண்மையை பேசுவதே தேசபக்தி என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதே ஓர் இந்தியனாக தலையாய பணி குறிப்பிட்டுள்ளார். நமது மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது தெளிவாக தெரிவதாகவும் இது தொடர்பாக செயற்கைக்கோள் புகைப்படங்களை பார்த்த பிறகும் முன்னாள் ராணுவ வீரர்களிடம் பேசிய பிறகும் நமது மண்ணை சீனா ஆக்கிரமிக்கவில்லை என எப்படி பொய் கூற முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் தொடர்ந்து உண்மைகளை உரத்த குரலில் பேசுவேன் என வீடியோவை பதிவிட்டு, இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது. இந்த உண்மையை மறைத்து, ஆக்கிரமிப்புக்கு துணைபோவது தேசவிரோதம் என்றும் ராகுல் காந்தி ​குறிப்பிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்