"மக்களாட்சி மாண்புகளை காக்க உரத்த குரல் எழுப்புவோம்" - காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி அறைகூவல்

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களாட்சி மாண்புகளை காக்க உரத்த குரல் எழுப்புவோம் - காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி அறைகூவல்
x
ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என பதிவிட்டுள்ள ராகுல்காந்தி மத்திய பிரதேசத்தில்  ஜனநாயக படுகொலையை செய்ததை போல, ராஜஸ்தானிலும் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக தெரிவித்துள்ளார்.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்க்கும் முயற்சிகளை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், உடனடியாக  ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.  காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை பதிவிட்டு, மக்களாட்சியின் மாண்புகளை காக்க  உரத்த குரல் எழுப்புவோம் என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில், மக்களாட்சிக்காக உரத்து குரல் எழுப்புவோம்' என்ற தலைப்பில் நாடு முழுவது பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்