ஆளுநர் மாளிகை வளாகத்தில் காங். ஆர்ப்பாட்டம் - ராஜஸ்தான் ஆளுநர் கடும் கண்டனம்

ராஜஸ்தான் ஆளுநர் மாளிகை வளாகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் மாளிகை வளாகத்தில் காங். ஆர்ப்பாட்டம் - ராஜஸ்தான் ஆளுநர் கடும் கண்டனம்
x
இது தொடர்பாக அவர் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், சட்டப்பேரவையை கூட்டுவது குறித்து தாம் நிபுணர்களுடன் விவாதிக்க வேண்டி இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனிடையே, ஆளுநர் மாளிகை வளாகத்தில், எம்.எல்.ஏக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியது நியாயமா என கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சரும், உள்துறையும் பாதுகாப்பு வழங்காவிட்டால் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி விடாதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுநர் தனது பாதுகாப்புக்கு எந்த துறையை அணுக வேண்டும் என்றும் அவர் வினவியுள்ளார். தவறான செயலுக்கு இது தொடக்கம் அல்லவா என்றும் ஆளுநர் வேதனை தெரிவித்துள்ளார்....

Next Story

மேலும் செய்திகள்