புதுச்சேரி பேரவையில் உரையாற்றினார் கிரண்பேடி - அமைச்சர், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த திங்கள்கிழமை ஆளுநர் உரையின்றி தொடங்கியது.
புதுச்சேரி பேரவையில் உரையாற்றினார் கிரண்பேடி - அமைச்சர், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
x
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த திங்கள்கிழமை ஆளுநர் உரையின்றி தொடங்கியது. முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில், பேரவை நடவடிக்கையில் பங்கேற்க வந்த அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் சிவகொழுந்து, துணை சபாநாயகர் பாலன் ஆகியோர் கிரண்​பேடியை  பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதனையடுத்து துணை நிலை ஆளுநர் அவை நடவடிக்கையில் பங்கேற்று ஆங்கிலத்தில் உரையாற்றினார். துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உரையை வாசிக்க தொடங்கிய உடன், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் லஷ்மி நாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி ஆகியோர் அவரது உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதில் சட்டமன்ற உறுப்பினர் ஜெயமூர்த்தி கருப்பு சட்டை அணிந்து பேரவைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
---

Next Story

மேலும் செய்திகள்