"உலக அரங்கில், உயர்ந்த இடத்தில் இருக்கிறது, இந்தியா" - ராகுல் காந்திக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில்

அண்டை நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்தவும் உலக அரசியலில் அதிக முக்கியத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தியா பணியாற்றி வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கர் விளக்கம் தெரிவித்துள்ளார்.
உலக அரங்கில், உயர்ந்த இடத்தில் இருக்கிறது, இந்தியா - ராகுல் காந்திக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில்
x
வெளியுறவுக்கொள்கையில் பாஜக தோல்வி அடைந்து விட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு, சமூக வலைதளத்தில் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார். 

காங்கிரஸ் ஆட்சியை விட மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் இந்தியா, உலக அரங்கில் உயர்ந்த இடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். முன்பைவிட தற்போது தான் சீனாவுக்கு சமமாக அரசியல் ரீதியாக இந்தியா பேசத் தொடங்கி இருப்பதாகவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது இந்திய, பாகிஸ்தான், சீன எல்லைப் பகுதியில் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும் அவர் பட்டியலிட்டு, காங்கிரஸ் ஆட்சியை விட, பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பல மடங்கு முன்னேற்றம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்