உள்ளாட்சித்துறை அதிகாரிகளுக்கு, அமைச்சர் வேலுமணி உத்தரவு

ஊரக உள்ளாட்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனோ தடுப்பு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
உள்ளாட்சித்துறை அதிகாரிகளுக்கு, அமைச்சர் வேலுமணி உத்தரவு
x
ஊரக உள்ளாட்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனோ  தடுப்பு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில், கொரோனா தொற்று குறைய சென்னையில் மேற்கொள்ளப்படும் தடுப்பு முறைகளை போல, மற்ற உள்ளாட்சி அமைப்புகளும் சிறப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அமைச்சர் வேலுமணி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதேபோல, தமிழகத்தில் பருவமழை துவங்கியுள்ள நிலையில் அரசு அலுவலகங்கள் , வீடுகள் ,  தனியார் நிறுவன கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் முறையாக செயல்பாட்டில் உள்ளதா என தீவிரமாக கண்காணிக்கவும், இதுதொடர்பான அறிக்கையை 15 நாட்களுக்குள் தலைமையிடத்துக்கு அனுப்ப வேண்டும் என்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்