100% மின் ரயில் பாதை - மாசு இல்லா ரயில்வேயாக மாறும் - அமைச்சர் பியூஷ் கோயல்
ரயில் வழித்தடங்களை நூறு சதவிகித மின்பாதையாக மாற்ற பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ரயில் வழித்தடங்களை நூறு சதவிகித மின்பாதையாக மாற்ற பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய இந்திய ரயில்வேயில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் கிலோ மீட்டர் பாதையை 100 சதவிகிதம் மின்மயமாக்கும் பணி, 2030ஆம் ஆண்டுக்குள் நிறைவுறும் என நம்புவதாக அவர் கூறினார். இதன் மூலம் உலகிலேயே முதன் முதலில், 100 சதவிகித ரயில்வே மின்பாதையை உருவாக்கிய நாடு என்றும், மாசு இல்லாத ரயில்வே என்ற பெருமையையும் இந்தியா பெறும் என்றார்.
Next Story