கேரளாவை அதிர வைத்த தங்க கடத்தல் விவகாரம் - பிரதமர் மோடிக்கு கேரள முதலமைச்சர் கடிதம்

கேரளாவை அதிர வைத்துள்ள தங்க கடத்தல் விவகாரத்தில் பாஜகவைச் சேர்ந்த சந்திப் நாயருக்கு முக்கிய பங்கு இருப்பதாக சுங்கத்துறை தரப்பு தெரிவித்திருப்பது அடுத்த கட்ட பரபரப்பை பற்றவைத்துள்ளது.
கேரளாவை அதிர வைத்த தங்க கடத்தல் விவகாரம் - பிரதமர் மோடிக்கு கேரள முதலமைச்சர் கடிதம்
x
* கேரளாவை அதிர வைத்துள்ள தங்க கடத்தல்  விவகாரத்தில் பாஜகவைச் சேர்ந்த சந்திப் நாயருக்கு முக்கிய பங்கு இருப்பதாக சுங்கத்துறை தரப்பு தெரிவித்திருப்பது அடுத்த கட்ட பரபரப்பை பற்றவைத்துள்ளது.  

* திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக நாட்டின் தூதரகத்திற்கு பார்சல் வருவது வழக்கமாக இருந்துள்ளது. இந்த பார்சலை ஸரித் என்பவர் எடுத்து சென்றுள்ளார். 

* மற்றொரு நாட்டின் தூதரகத்திற்கு வரும் பார்சல்களை சுங்கத்துறையினர் வழக்கமாக சோதனையிடுவதில்லை. ஆனால், அமீரக நாட்டின் தூதரகத்திற்கு வரும் பார்சல்களில் தங்கம் கடத்துவதாக தகவல் கசிந்தது.

* இதை தொடர்ந்து, வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் சிறப்பு அனுமதி பெற்ற சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பார்சலை சோதனை செய்தபோது அதிர்ச்சி காத்திருந்தது.  

* அந்த பார்சலில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ தங்கம் இருந்தது.  

* திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகப் பெயரைப் பயன்படுத்தி தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த கடத்தலில் கேரள அரசின் தகவல் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ்க்கு தொடர்பு இருப்பது உறுதியானது. 

* இதையடுத்து, ஸ்வப்னா சுரேஷ் வீட்டில் சுமார் ஆறு மணி நேரம் சோதனை நடத்திய அதிகாரிகள், முக்கிய ஆவணங்களை கைப்பற்றி தீவிர விசாரணையில் இறங்கினர். 

* இந்த கடத்தலில் பாஜகவைச் சேர்ந்த சந்திப் நாயருக்கு முக்கிய பங்கு இருப்பதாக சுங்கத்துறை தரப்பு தெரிவித்தது.  

* இந்த விவகாரத்தில், சரத் என்பவரை, கைது செய்துள்ள சுங்கத்துறையினர், அவரை  7 நாள்  காவலில் எடுத்து விசாரிக்க முடிவு  செய்துள்ளனர். 

* தங்க கடத்தல் வழக்கில் முதல்வர் அலுவலகத்துக்கு தொடர்பு இருப்பதால், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஒருமித்த குரல் எழுப்பியுள்ளன. 

* இதற்கிடையே, கேரள முதலமைச்சர்  பினராயி விஜயனின் முதன்மை செயலர் சிவசங்கரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. 

* இந்த விவகாரத்தில் விசாரணையை எதிர்கொள்ள தயார் என தெரிவித்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சிபிஐ விசாரணை கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்