"33 அமைச்சர்கள் பதவியேற்றது அரசியல் சாசனத்துக்கு எதிரானது" - மத்தியப் பிரதேச முதலமைச்சர் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
மத்தியப் பிரதேச சட்டப் பேரவையில் 206 உறுப்பினர்களே உள்ள நிலையில், 33 அமைச்சர்களை நியமித்த முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் நடவடிக்கை, சட்டத்திற்கு புறம்பானது என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.
மத்தியப் பிரதேச சட்டப் பேரவையில் 206 உறுப்பினர்களே உள்ள நிலையில், 33 அமைச்சர்களை நியமித்த முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் நடவடிக்கை, சட்டத்திற்கு புறம்பானது என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. முதலமைச்சரின் இந்த நடவடிக்கை அரசியல் சட்டத்திற்கு புறம்பானது என்பதால், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாக அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான சவுத்ரி ராகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.
Next Story