"சீனாவை புறக்கணிக்க மக்களை அறிவுறுத்துவது ஏன்?" - மத்திய பா.ஜ.க. அரசுக்கு ஆம் ஆத்மி கட்சி கேள்வி

நாட்டு மக்களை சீன பொருட்களை நிராகரிக்க வேண்டும் என அறைகூவல் விடுத்து பா.ஜ.க. இரட்டை வேடம் போடுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
சீனாவை புறக்கணிக்க மக்களை அறிவுறுத்துவது ஏன்? - மத்திய பா.ஜ.க. அரசுக்கு ஆம் ஆத்மி கட்சி கேள்வி
x
நாட்டில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஏழை மற்றும் சாமானிய குடும்பங்களின் நலனுக்காக சீனாவி​டம் இருந்து ஐந்தாயிரத்து 700 கோடி ரூபாய் கடன் பெற்றுக் கொண்டு, மறுபுறம் நாட்டு மக்களை சீன பொருட்களை நிராகரிக்க வேண்டும் என அறைகூவல் விடுத்து பா.ஜ.க. இரட்டை வேடம் போடுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டி உள்ளது. ஒரு புறம் இந்திய, சீன எல்லையில், இந்திய வீரர்கள் உயிரிழந்து வரும் நிலையில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நாடகம் ஆடி வருவது ஏன் என்றும் அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்