"சீனாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தல்

சீனாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
சீனாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தல்
x
லடாக் எல்லையில் உயிரிழந்த 20 இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்துக்கு  நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்மோகன் சிங் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,  ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரலாற்று துரோகம் ஆகிவிடும் என குறிப்பிட்டுள்ளார்.  வீரமரணம் அடைந்த வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.  இந்த சூழலில் சீனாவின்  அச்சுறுத்தலுக்கு எதிராக நாம் அனைவரும் ஒற்றுமையோடு இருக்க வேண்டியது அவசியமாகும் என்றும் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்