ஏழை மக்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை - சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்ய திட்டம்
கொரோனா நிவாரண நிதியாக ஏழை மக்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
கொரோனா நிவாரண நிதியாக ஏழை மக்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் கூறுகையில், மத்திய அரசு அறிவித்த நிதித் திட்டங்கள் ஏழை மக்களை சென்று சேரவில்லை என கூறினார். ஏழை மக்களுக்கு நேரடியாக நிவாரண உதவி சேரும் வகையில், அவர்களின் வங்கிக் கணக்கில் 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார். மத்திய அரசுக்கு அழுத்தம்தரும் விதமாக நாடு முழுவதும் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக சச்சின் பைலட் தெரிவித்தார்.
Next Story