ரூ. 68,000 கோடி வாரா கடன் விவகாரம் : "3 பேரிடம் இருந்து வாரா கடனை வசூலிக்க சம்மந்தப்பட்ட வங்கிகளுக்கு வரி - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தல்

ரூ 68,000 கோடி வாரா கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தார்களா, நிறுத்தி வைத்து உள்ளார்களா என்பது ஏட்டுச் சுரைக்காய் விவாதம் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ரூ. 68,000 கோடி வாரா கடன் விவகாரம் : 3 பேரிடம்  இருந்து வாரா கடனை வசூலிக்க சம்மந்தப்பட்ட வங்கிகளுக்கு வரி - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தல்
x
ரூ 68,000 கோடி வாரா கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தார்களா, நிறுத்தி வைத்து உள்ளார்களா என்பது ஏட்டுச் சுரைக்காய் விவாதம் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை, மகிழ்ச்சியோடு கொண்டாடுபவர்கள் நிரவ் மோடி, மெஹுல் சோக்சி மற்றும் விஜய் மல்லையா என்றும் சிதம்பரம் தமது பதிவில் சுட்டிக்காட்டி உள்ளார். மத்திய அரசு இந்த மாபெரும் தவற்றை திருத்த  ஒரே வழிதான் உண்டு என்றும், இந்த 3 நபர்களுடைய வாரா கடன் தொகைகளை 'வாரா கடன்' என்று பேரேட்டில் எழுதி அந்த கடன்களை வசூலிக்கும் முயற்சிகளை முடுக்கி விட என சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உடனடியாக உத்தரவிடவேண்டும் என்றும் சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்