முதலமைச்சர் பழனிசாமி உடன் பிரதமர் மோடி ஆலோசனை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்

நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், காணொலி மூலம், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
x
கொரோனாவால், அதிகளவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களோடு காணொளிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலேசானை நடத்தினார். பீகார், ராஜஸ்தான், அஸ்ஸாம், ஹரியானா, மகாராஷ்டிரா, மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் கலந்து கொண்டனர். அதே போல், தமிழகம் சார்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளிக்காட்சி மூலமாக இணைந்தார். மாநிலத்தின் தற்போதைய நிலவரம் குறித்து பேச ஒவ்வொரு முதல்வருக்கும் 3 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம்,  உள்துறை செயலாளர் பிரபாகர் , சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோரும் உடன் இருந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்