கார்த்தி சிதம்பரம் லண்டன், பிரான்ஸ் செல்ல அனுமதி : டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு
சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம், டென்னிஸ் போட்டிக்காக லண்டன் மற்றும் பிரான்ஸ் செல்ல டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பிரான்ஸ் மற்றும் லண்டன் செல்ல கார்த்திக் சிதம்பரத்திற்கு நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார். ஏற்கனவே கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story