இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசின் நிலை - நாடு தழுவிய போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு

இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து நாடுதழுவிய அளவில் போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசின் நிலை - நாடு தழுவிய போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு
x
இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து நாடுதழுவிய அளவில் போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. மாநில அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்றும், பதவி உயர்வில் இடஒதுக்கீடு கேட்பது எந்தவொரு தனி நபருக்கும் அடிப்படை உரிமை இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.  இந்த நிலையில், இந்த விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது. உத்தரகண்ட் பாஜக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில், இடஒதுக்கீட்டை பாஜக அரசு சீர்குலைப்பதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.  இந்த நிலையில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தவும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்