விரைவில் போராட்டம் - ஹெச்.வசந்தகுமார் அறிவிப்பு

"சாலை சீரமைப்பு பணி இதுவரை துவங்கவில்லை"
விரைவில் போராட்டம் - ஹெச்.வசந்தகுமார் அறிவிப்பு
x
நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணிக்காக, 49  கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மூன்று ஆண்டுகள் ஆகியும் இதுவரை பணிகள் தொடங்கவில்லை என ஹெச்.வசந்தகுமார் எம்.பி தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் வெற்றி பெற்றதால், பாஜக அரசு மக்களை புறக்கணிப்பதாகவும் குற்றம்சாட்டி உள்ளார். இது சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க போவதாக தெரிவித்த ஹெச்.வசந்தகுமார், காந்தி சிலைக்கு முன்பாக அதிகாரிகளையும், மத்திய அரசையும் கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்