ஜனவரி 31-ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர்...

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 31-ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர்...
x
2020-2021ஆம் நிதியாண்டிற்கான, பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் முதல் தேதி, தாக்கல் செய்கிறார். இதற்காக, வருகிற 31 ஆம் தேதி, நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்கி, பிப்ரவரி 11-ம் தேதி வரை நடைபெறும் என மக்களவை செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். கூட்டத்தொடரின் முதல் நாளின் போது, இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவார் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத் தொடரின் 2 வது பகுதியாக, மார்ச் 2-ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது. ஏப்ரல் 3-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்