"உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா.வுக்கு சின்னம் ஒதுக்க கோரும் மனு மீது இன்றைக்குள் முடிவு"

மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா.வுக்கு சின்னம் ஒதுக்க கோரும் மனு மீது இன்றைக்குள் முடிவு
x
உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா.வுக்கு சின்னம்  ஒதுக்க கோரும் மனு மீது இன்றைக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் உள்ளாட்சி தேர்தலில்  சைக்கிள் அல்லது மோட்டார் சைக்கிள் அல்லது ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தை ஒதுக்க கோரி த.மா.கா. சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.  இது தொடர்பான கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டதால்   த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம்   சின்னம் ஒதுக்க கோரி, மாநில தேர்தல் ஆணையத்திடம் உடனடியாக புதிய கோரிக்கை மனுவை அளிக்க த.மா.கா.-வுக்கு  அறிவுறுத்தியது.

Next Story

மேலும் செய்திகள்