"இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு - அரசியல் கட்சியினர் போட்டிப்போட்டு மனு தாக்கல்"

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைய உள்ளதால், அரசியல் கட்சியினர் போட்டிப்போட்டு மனுத்தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு - அரசியல் கட்சியினர் போட்டிப்போட்டு மனு தாக்கல்
x
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களை தவிர்த்து வருகிற 27 மற்றும் 30-ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் போட்டியிடும் பகுதிகள் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் அறிவித்திருப்பதால், வேட்புமனு தாக்கல் சூடுபிடித்தது. இன்று வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சியினர் போட்டி போட்டு வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 17-ந்தேதி நடக்கிறது. வேட்பு மனுவை திரும்பப்பெற 19-ந்தேதி கடைசி நாள். அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

Next Story

மேலும் செய்திகள்