நாடு முழுவதும் போக்சோ வழக்குகளை விசாரிக்க சிறப்பு ஏற்பாடு - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

குழந்தைகள் - பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க, நாடு முழுவதும் ஆயிரத்து 23 சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் போக்சோ வழக்குகளை விசாரிக்க சிறப்பு ஏற்பாடு - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி
x
மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்க நாடு முழுவதும் ஆயிரத்து 23 சிறப்பு விரைவு நீதிமன்றங்களை 767 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் அமைக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். இதற்காக  மத்திய அரசு 474 கோடி ரூபாயை ஒதுக்க உள்ளதாகவும், எஞ்சிய தொகை மாநில அரசுகள் ஒதுக்கும் என்றும் கூறியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 218 சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்க திட்டமிட்டு உள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்