ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா ? - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று, தீர்ப்பு அளிக்க உள்ளது.
ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா ? - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு
x
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்தது. இதில் சி.பி.ஐ. வழக்கில் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்டு மாதம் 22- ந்தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவர் அமலாக்கத்துறை வழக்கிலும் கைதானார்.  ப.சிதம்பரம் ஜாமீன் மனு இதுவரை 5 முறை தள்ளுபடி செய்யப்பட்டது.  இறுதியாக சி.பி.ஐ. வழக்கில் அவருக்கு ஜாமின் கிடைத்தாலும்,  அமலாக்கத்துறை வழக்கு காரணமாக அவர் தொடர்ந்து சிறையிலேயே இருந்து வருகிறார். இந்த நிலையில், ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று, புதன்கிழமை தீர்ப்பளிக்க உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்