பா.ஜ.க.வில் போட்டியிட விருப்ப மனு தொடக்கம் : 9 மேயர், கவுன்சிலர் பதவிக்கு 160 பேர் மனு

உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட விரும்புவர்களிடம் விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது.
பா.ஜ.க.வில் போட்டியிட விருப்ப மனு தொடக்கம் : 9 மேயர், கவுன்சிலர் பதவிக்கு 160 பேர் மனு
x
உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட விரும்புவர்களிடம் விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், சிறப்பு அழைப்பாளர் நடிகை கௌதமி ஆகியோர் முன்னிலையில் மனுக்கள் பெறப்பட்டன. முதல் நாளில் சென்னை உட்பட 9 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளுக்கும் மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கும் 160 பேர் விருப்ப மனு அளித்தனர். திங்கள்கிழமை வரை 3 நாட்களுக்கு விருப்ப மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்