"தீவிரவாதத்தை ஒடுக்குவதில் சமரசத்துக்கு இடமில்லை" - உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்

எந்தவொரு சமூகத்திற்கும் பயங்கரவாதம் ஒரு தடை என்றும், தீவிரவாதத்தால் நமது நாடு மிகவும் பாதிப்பை சந்தித்து உள்ளதாகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
x
அரியானா மாநிலம், மானேசரில் நடைபெற்ற என்.எஸ்.ஜி. தொடங்கப்பட்ட ஆண்டு விழாவில் பங்கேற்று பேசும் போது, உலகில் எந்தவொரு நாடும் சந்திக்காத அளவுக்கு இந்தியா தீவிரவாதத்தால் பாதிப்பை சந்தித்து உள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். தீவிரவாதத்தை ஒடுக்குவதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.   என்.எஸ்.ஜி. அமைப்பு இருப்பதால் எங்கள் பாதுகாப்பு பற்றி கவலையில்லாமல் இருக்கிறோம்  என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் என்.எஸ்.ஜி. வீரர்கள் நிகழ்த்தி காட்டிய சாகச ஒத்திகைகளை பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. 

Next Story

மேலும் செய்திகள்