தேஜஸ் போர் விமானத்தில் ராஜ்நாத் சிங் பயணித்தார்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேஜஸ் போர் விமானத்தில் பயணித்தார்.
x
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேஜஸ் போர் விமானத்தில் பயணித்தார். பெங்களூரு எச்.ஏ.எல் நிறுவன தளத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த தேஜஸ் போர் விமானத்தில், 20 நிமிடம் பயணித்த ராஜ்நாத் சிங், துணை விமானி இருக்கையில் அமர்ந்திருந்தார். உலகம் முழுவதும் போர் விமானங்களை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு இந்தியா வந்துள்ளதாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் தேஜஸ் ரக போர் விமானத்தில் அரைமணி நேரம் பறந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவ​ர், தேஜஸ் பயணம் வசதியாவும், இயல்பாகவும் இருந்ததாகவும், தாம் அதனை மிகவும் அனுபவித்ததாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதனை உருவாக்கிய இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவன ஊழியர்கள், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்  மற்றும் பிற நிறுவனங்களுக்கு பாராட்டுக்களை ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்