"எம்பி கனிமொழியின் வெற்றியை எதிர்த்து வழக்கு - செப். 23 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு"

தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக எம்பி கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கின் விசாரணை வருகிற 23 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
எம்பி கனிமொழியின் வெற்றியை எதிர்த்து வழக்கு - செப். 23 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு
x
தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக எம்பி  கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கின் விசாரணை வருகிற  23 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வாக்காளர் சந்தானகுமார் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, ஏற்கனவே எம்பி கனிமொழியின் வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் வழக்கு தொடுத்திருப்பதை சுட்டிக்காட்டினார். எனவே,   தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வருகிற 23 ம் தேதி, பதில் மனுக்களை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்