தற்போதைய அரசியல் தொடர்ந்தால் பாகிஸ்தான் சுக்குநூறாக பிளவுபடுவதை எந்த சக்தியாலும் தடுக்க இயலாது - பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

தற்போது பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் அரசியல் தொடருமானால் அந்த நாடு சுக்குநூறாக பிளவுப்படுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் தொடர்ந்தால் பாகிஸ்தான் சுக்குநூறாக பிளவுபடுவதை எந்த சக்தியாலும் தடுக்க இயலாது - பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
x
தற்போது பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் அரசியல் தொடருமானால் அந்த நாடு சுக்குநூறாக பிளவுப்படுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.  குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், மத ரீதியாக இந்தியா, பாகிஸ்தான் என இந்தியா பிரிக்கப்பட்டதாகவும், பின்னர் 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தான் மீண்டும் பிளவுப்பட்டதையும் சுட்டிக்காட்டினார். தனது நாட்டில் உள்ள சிறுபான்மை சமுகத்துக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத பாகிஸ்தான், மனித உரிமை பற்றி பேசி வருவதாக குற்றம்சாட்டினார்.  மனித உரிமை மீறல் நடக்கிறது என்றால், அது பாகிஸ்தானாக தான் இருக்கும் என்றும் ராஜ்நாத் சிங் சாடியுள்ளார். மேலும், இந்தியாவில் சிறுபான்மையினர் நேற்றும், இன்றும், நாளையும் பாதுகாப்பாக தான் இருப்பார்கள் என்றும் ராஜ்நாத் சிங் உறுதிபடத் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்