"இந்தியாவில் குறைந்த விலையில் இணையதள சேவை" - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
உலகிலேயே மிகக்குறைந்த விலையில் இணையதள சேவை இந்தியாவில் கிடைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அரசு முறை பயணமாக பூடான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள ராயல் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது இரு நாடுகள் இடையேயான கலாச்சார பண்பாட்டு ரீதியான தொடர்புகளை அவர் நினைவு கூர்ந்தார். பூடான் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மாணவர்களிடம் பேசுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார். உலகிலேயே மிகப்பெரிய சுகாதார திட்டமான ஆயுஷ்மான் திட்டத்தின் மூலம் இந்தியாவில் 500 மில்லியன் மக்களுக்கு சுகாதார உத்தரவாதம் கிடைப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் உலகிலேயே மிகக்குறைந்த விலையில் இணையதள சேவை இந்தியாவில் கிடைப்பதாகவும் மோடி கூறினார்.
Next Story