மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார், கர்நாடக ஆளுநர் : கர்நாடகத்தில் அரசியல் குழப்பம் நீடிப்பு

கர்நாடகத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வருவதால், தற்போதைய சூழல் குறித்து, அம் மாநில ஆளுநர் வஜூபாய் வாலா, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பி உள்ளார்.
மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார், கர்நாடக ஆளுநர் : கர்நாடகத்தில் அரசியல் குழப்பம் நீடிப்பு
x
கர்நாடகத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வருவதால், தற்போதைய சூழல் குறித்து, அம் மாநில ஆளுநர் வஜூபாய் வாலா, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பி உள்ளார். குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடி முற்றியுள்ளது. சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த, ஆளுநர் கெடு விதித்தபோதிலும், திங்கட்கிழமைக்கு, பேரவையை ஒத்திவைத்து, சபாநாயகர் உத்தரவிட்டார். எனவே, திங்கட்கிழமை, பகல் 11 மணிக்கு பேரவை மீண்டும் கூடுகிறது. கர்நாடக சட்டப்பேரவையில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக எம்.எல். ஏக்கள் வருகிற திங்கட்கிழமை வரை, காத்திருக்க முடிவு செய்துள்ளனர். இதனிடையே, பெங்களூருவில் இன்று மாலை 5 மணி அளவில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறி்விக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்