"ஒவ்வொரு இந்தியரின் பாதுகாப்புக்காகவும் பாடுபடுவோம்" - மோடி

சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் உண்மை, நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு இந்தியரின் பாதுகாப்புக்காகவும் பாடுபடுவோம் - மோடி
x
சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் உண்மை, நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உண்மை நிகழ்வுகளை விரிவாக ஆய்வு செய்து தீர்ப்பு வழங்கிய சர்வதேச நீதிமன்றத்தை பாராட்டுவதாக தெரிவித்துள்ளார். குஷ்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ள மோடி,  ஒவ்வொரு இந்தியரின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக தனது அரசு எப்போதும் பாடுபடும் எனவும் கூறியுள்ளார். இதேபோல், குஷ்பூஷன் ஜாதவுக்கு தூதரக அனுமதி வழங்குமாறு பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்