திமுகவின் அம்மியும் , அதிமுகவின் மம்மியும் : சட்டப் பேரவையில் ருசிகர விவாதம்

ஆடிக்காற்றில் அம்மி பறப்பதை போல, அதிமுக ஆட்சியும் பறந்து போய் விடும் என்று சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா குறிப்பிட்டார்.
திமுகவின் அம்மியும் , அதிமுகவின் மம்மியும் : சட்டப் பேரவையில் ருசிகர விவாதம்
x
ஆடிக்காற்றில் அம்மி பறப்பதை போல, அதிமுக ஆட்சியும் பறந்து போய் விடும் என்று சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா குறிப்பிட்டார். இதற்கு பதில் அளித்த பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், ஆடிக்காற்றும் அடிக்காது - அம்மியும் பறக்காது, அம்மாவின் ஆட்சி, எப்போதும் அகலாது என்று கூறினார். மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் குறுக்கிட்டு, இந்த அரசு அம்மிக்கு பதிலாக ஏற்கனவே மிக்சி கொடுத்து விட்டதாகவும், எனவே, பழைய பழமொழி இப்போது பொருந்தாது என்றார். தமிழகத்தில் எப்போதும் அம்மாவின் ஆட்சி தான் என பொருள்படும் வகையில் மம்மி ஆட்சி தான்
தொடரும் என அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறியபோது, பேரவையில் சிரிப்பலை எழுந்தது.


Next Story

மேலும் செய்திகள்