சென்னை, கோவை, திருச்சியில் ராணுவ தொழிற்பாதை - மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்

தமிழகத்தில் ராணுவ தொழிற்பாதை அமைக்க ஐந்து இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்துள்ளார்.
சென்னை, கோவை, திருச்சியில் ராணுவ தொழிற்பாதை -  மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்
x
தமிழகத்தில் ராணுவ தொழிற்பாதை அமைக்க ஐந்து இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் உத்தரபிரதேசத்தில், ராணுவ தொழிற்பாதை அமைக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் ராணுவ பாதை அமைக்க தேர்வான இடங்கள் குறித்து அதிமுக எம்.பி. மைத்ரேயன் கேள்வி எழுப்பினார். இதற்கு, சென்னை, சேலம், திருச்சி, கோவை, ஓசூர் உள்ளிட்ட 5 இடங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளதாக மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்தார். சம்பந்தப்பட்ட நபர்களுடன் 6 கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்