தண்ணீர் பிரச்சினையை எதிர்கொள்வது எப்படி? - நாளை காணொலி மூலம் முதலமைச்சர் ஆலோசனை

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுபாடு பிரச்சினையை எதிர்க்கொள்வது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் கானொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.
தண்ணீர் பிரச்சினையை எதிர்கொள்வது எப்படி? - நாளை காணொலி மூலம் முதலமைச்சர் ஆலோசனை
x
நாளை முதல் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், குடிநீர் வழங்கல் துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மாவட்டங்களில் நிலவும் தண்ணீர் பிரச்சினை மாற்று திட்டங்கள் அவற்றை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள், வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ள மழை நீர் சேகரிப்பு திட்டத்தை தீவிரப்படுத்துவது நிலத்தடி நீர் செரிவூட்டும் திட்டங்களை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் விவகாரங்களின் அடிப்படையில் புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்