அம்பேத்கரின் சிலை அமைக்க முயற்சி : காங். தலைவர்களை அப்புறப்படுத்தி அழைத்துச்சென்ற போலீசார்

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் அம்பேத்கரின் சிலை அமைக்க முயன்ற காங்கிரஸ் தலைவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.
அம்பேத்கரின் சிலை அமைக்க முயற்சி : காங். தலைவர்களை அப்புறப்படுத்தி அழைத்துச்சென்ற போலீசார்
x
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் அம்பேத்கரின் சிலை அமைக்க முயன்ற காங்கிரஸ் தலைவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாகுட்டம் பகுதியில், தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ஹனுமந்த ராவ் மற்றும் முன்னாள் அமலாபுரம் எம்.பி. ஹர்ஷா குமார் அம்பேத்கரின் சிலையை அமைக்க முயற்சித்துள்ளனர். இது பற்றி தகவலறிந்து வந்த போலீசார், அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி விசாரணைக்காக  அழைத்து சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்