ப்ரக்யா சிங் தாகூர் எம்.பியாக பதவியேற்கும் போது மக்களவையில் சலசலப்பு
மத்திய பிரதேசத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண் சாமியார் ப்ரக்யா சிங் தாக்கூர் உறுப்பினராக பதவி ஏற்கும்போது அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
அவர் பதவி ஏற்கும்போது தனது பெயரோடு, ஆன்மீக பெயரையும் சேர்த்து வாசித்தார். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்து கூச்சலிட்டனர். இதனையடுத்து, தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள சான்றிதழில் என்ன பெயர் இருக்கிறதோ அதே பெயரை வாசிக்கும்படி தெரிவித்தார். பின்னர், தேர்தல் ஆணையம் வழங்கியிருந்த சான்றிதழில் குறிப்பிட்டிருந்த பெயரை பிரக்யா வாசித்தார். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
Next Story