இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு - சிறப்பு நீதிமன்றத்தில் வைகோ நேரில் ஆஜர்

கடந்த 2009 ஆம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு - சிறப்பு நீதிமன்றத்தில் வைகோ நேரில் ஆஜர்
x
இதற்காக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வைகோ நேரில் ஆஜரானார். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக அவர் மீது பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து வாக்குமூலம் பெறப்பட்டதை அடுத்து, வழக்கனாது ஜூன் மாதம் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்