பாஜக 300 இடங்களை கைப்பற்றும் என்று முன்பே கூறினேன் - பிரதமர் மோடி பெருமிதம்

6ஆம் கட்ட தேர்தல் முடிந்த பின்னர், பாஜகவுக்கு 300க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என்று தான் கூறிய போது பலரும் கிண்டலடித்தாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
பாஜக 300 இடங்களை கைப்பற்றும் என்று முன்பே கூறினேன் - பிரதமர் மோடி பெருமிதம்
x
நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மோடி, முதல் முறையாக குஜராத் சென்றார். அப்போது அகமதாபாத் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்குள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், தொடர்ந்து, கட்சிக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், மிகப்பெரிய வெற்றி, என்பது மிகப்பெரிய பொறுப்பு என்று தெரிவித்தார். தொடர்ந்து சூரத் தீ விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்திய அவர், அந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து, அங்கிருந்து புறப்பட்ட மோடி, நேராக தனது தாயார் ஹீராபென்னை சந்தித்து ஆசி பெற்றார். இன்று இரவு அந்நகரிலேயே தங்கியிருக்கும் மோடி, நாளை காலை மீண்டும் டெல்லி திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்