முதல் முறையாக எம்.பி ஆனவர்கள் 276 பேர்
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 276 பேர் புதுமுகங்களாக தேர்வாகியுள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் முக்கிய கட்சிகள் அனைத்தும் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்புகளைக் கொடுத்திருந்த நிலையில், 276 பேர் புதுமுகங்களாக தேர்வாகியுள்ளனர். 2-வது முறையாக 149 உறுப்பினர்களும், 3-வது முறையாக 52 உறுப்பினர்களும் தேர்வாகியுள்ளனர். 4-வது முறையாக 36 பேரும், 5-வது முறையாக 11 உறுப்பினர்களும், 6-வது முறையாக 11 பேரும் எம்.பி ஆகியுள்ளனர். 7-வது முறையாக 4 பேரும், 8-வது முறையாக 3 பேரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மக்களவைக்கு தேர்வாகியுள்ளனர்.
Next Story