முதல்வராக 30ஆம் தேதி பதவியேற்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சியின் பொதுச் செயலாளரான ஜெகன் மோகன் ரெட்டி, ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் அம்மாநில ஆளுநர் நரசிம்மனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
முதல்வராக 30ஆம் தேதி பதவியேற்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி
x
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சியின் பொதுச் செயலாளரான ஜெகன் மோகன் ரெட்டி, ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் அம்மாநில ஆளுநர் நரசிம்மனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆட்சி அமைக்க 151 சட்டமன்ற உறுப்பினர் ஆதரவு உள்ளதை அடுத்து, 30 ஆம் தேதி ஆட்சி அமைக்க வருமாறு ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆளுநர் நரசிம்மன் அழைப்பு விடுத்தார். இதன்படி ஜெகன்மோகன் ரெட்டி வரும் 30ஆம் தேதி விஜயவாடாவில் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி  உள்ளது. 30 ஆம் தேதி ஜெகன்மோகன் ரெட்டி மட்டும் முதலமைச்சராக பதவியேற்பார் என்றும் அமைச்சரவையை பின்பு அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்